தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆனைமலை சுற்று வட்டாரத்தில் முதல் போகத்திற்கான நாற்று நடவு பணி தீவிரம்

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் நெல் நாற்று நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, கோட்டூர்,கோபாலபுரம், அம்பராம்பாளையம், வேட்டைக்காரன்புதூர்,காளியாபுரம்,ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் ஆழியாற்றிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து விவசாயிகள் நெல் விதைப்பில் ஈடுபடுகின்றனர்.
Advertisement

இந்நிலையில், ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் இந்த ஆண்டில் கடந்த ஜனவரியில் சாகுபடி செய்யப்பட்ட நெல் நன்கு விளைந்ததையடுத்து ஏப்ரல் இறுதியில் அறுவடை செய்யப்பட்டன.பின் கடந்த மாதம் பருவமழை துவக்கம் மற்றும் ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது சீரமைத்தனர்.

இதைத்தொடர்ந்து சுமார் 3 வாரத்துக்கு முன்பு நாற்றங்கால் ஏற்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.அவை வளர்ச்சியடைந்து நெல் நாற்றுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து தற்போது ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நாற்று நடும் பணியை துவங்கியுள்ளனர்.இதில் காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நாற்று நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விரைந்து நாற்று நடவு மேற்கொள்ள இயந்திரம் மூலம் அணி நடவு நடைபெற்றது. இதனை, வேளாண்மை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தற்போது சாகுபடி செய்யப்படும் நெல் வரும் நவம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News