தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு 2 நாளில் 50,000 பேர் பங்கேற்பு: தீயணைப்பு துறை டிஜிபி சீமா அகர்வால் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 375 தீயணைப்பு நிலையங்களில் நடைபெற்ற தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் கடந்த 2 நாட்களில் 50 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தீயணைப்பு துறை டிஜிபி சீமா அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை பொதுமக்களிடையே பரப்புவதற்காக ‘வாங்க காற்றுக்கொள்ளவோம்’ என்ற ஒரு முயற்சியை தீயணைப்பு துறை டிஜிபி சீமா அகர்வால் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.

Advertisement

அதன்படி, பொதுமக்களை அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு அழைத்து அத்தியாவசிய தீப்பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் இவ்விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டன. இம்முயற்சியின் ஒரு பகுதியாக, மாநில முழுவதுமுள்ள 375 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நிலையங்களில் தீ குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் பொதுமக்களுக்காக நடந்தப்பட்டன.

இந்த 2 நாட்களும் காலை, மதியம் மற்றும் மாலை என 3 வகையான இடைவெளியில் தீயணைப்பு நிலையங்களுக்கு தன்னார்வமாக வரும் பொது மக்கள், இளைஞர்களுக்கு தீ விபத்துக்கள், தீயணைக்கும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு கல்வியும், எலக்ட்ரிக் தீ விபத்து, பேரிடர் கால விபத்து மீட்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு கல்வி இலவசமாக வழங்கப்பட்டன. அதன்படி,நேற்று முன் தினம் 24,947 மற்றும் நேற்றைய தினம் 24,156 என ஒட்டுமொத்தமாக 49,103 பேர் பங்கேற்றதாக தீயணைப்பு துறை டிஜிபி சீமா அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement