தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புதுக்கோட்டையில் அதிகாலை அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பல லட்சம் மருத்துவ கருவிகள் எரிந்து நாசம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள அவசர சிகிச்சை பயன்படுத்தும் மருத்துவ கருவிகள், உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தது. புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக சுமார் 1000 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் புறநோயாளிகளாக தினமும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இங்கு தரைதளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் வருகை பதிவு அறை மற்றும் உயர் சார்பு அலகு(high dependency Unit) வார்டு இயங்கி வருகிறது. இதில் ஹெச்டியு வார்டு என்பது தீவிர சிகிச்சை பிரிவை(ஐசியு) போல தீவிரமான கவனிப்பு தேவைப்படாத, ஆனால் பொது வார்டை விட அதிக கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கான ஒரு சிறப்பு பிரிவாகும்.

இந்த வார்டில் 20 படுக்கை வசதி உள்ளது. தற்போது இந்த வார்டில் நோயாளிகள் யாரும் இல்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஹெச்டியு வார்டில் தீவிபத்து ஏற்பட்டு அறை முழுவதும் புகை மண்டலமானது. புகை குபுகுபுவென கிளம்பியதால் அந்த கட்டிடத்தில் இருந்த தரைதளம் முழுவதும் புகை மண்டலமானது. இதனால் அச்சமடைந்த மற்ற வார்டுகளில் இருந்த நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் வார்டுகளை விட்டு வெளியேறினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டீன் கலைவாணி புதுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்ததுடன், புகையை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் அந்த வார்டில் இருந்த ஆக்சிஜன் கருவிகள், உபகரணங்கள், படுக்கைகள் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.