தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்போரூர் காவல் நிலையத்தில் தென்னை மரத்தில் தீ

திருப்போரூர்: திருப்போரூர் காவல் நிலையத்தில் டிரான்ஸ்பார்மரில் தென்னை மரத்தின் ஓலை உரசியதில் தீ பிடித்து எரிந்தது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் காவல் நிலையம் தெற்கு மாடவீதியில் அமைந்துள்ளது. காவல் நிலைய வளாகத்தில் 5க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இந்த தென்னை மரங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் தென்னை ஓலை உரசி நேற்று காலை 6 மணியளவில் தீ பற்றியது. தீ மளமளவென பரவி தென்னை மரத்தின் உச்சியில் எரிய தொடங்கியது.
Advertisement

இதையடுத்து, திருப்போரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வந்து, மின்வாரிய நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர், மின்சார டிரான்ஸ்பார்மரில் உரசியபடி இருந்த தென்னை ஓலைகள் வெட்டப்பட்டன. பின்னர், மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனால், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தவர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement