தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனல்மின் நிலைய கட்டுமான பனியின் போது தீ விபத்து: பொன்னேரி அருகே ஆயில் ஏற்றி வந்த லாரியில் தீப்பற்றியது

 

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வயலூர் என்ற கிராமத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர அனல்மின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு அதிக அளவிலான மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு இங்கு மின்நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

தலா 660 மெகா வாட்ஸ் திரன் உள்ள இரண்டு அலகுகளில் 1320 மெகா வாட்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய அளவில் இந்த அனல்மின்னல் கட்டுமான பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்த சுழலில் தான் இந்த அனல்மின் நிலையத்தில் மின்மாற்றியில் டேங்கர் லாரியில் இருந்து ஆயில் நிரப்பும் பணிகளின் போது திடீர் என தீ பற்றி கொழுந்து விட்டு தீ கரும் புகையுடன் வானுயர எழுந்தது.

இந்த தீ விபத்து குறித்து அளிக்கபட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு மூன்று நிலையங்களில் இருந்து வந்த தீ அணைப்பு வாகன வீரர்கள் தண்ணீரையும் ரசாயன நுரையும் பிச்சு அடித்து தீயை கட்டுப்படுத்தினர். முதற்கட்டமாக தீ அருகில் பரவாமல் கட்டுப்படுத்தி தொடர்ச்சியாக லாரியிலும் மின்மாற்றியிலும் முழுமையாக தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதின் காரணமாக அனல்மின் கட்டுமானப்பணிகளில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபட்டுள்ளது. தொடர்ச்சியாக தீ விபத்திற்கான கரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனல்மின் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News