தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ.10 லட்சம் அபராதம் எடப்பாடியுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை

சேலம்: தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு தமிழக முதல்வர் பெயரை வைக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில், சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக ஏன் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள் என கடுமையாக எச்சரித்து ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த அபராதத்தை ஒரு வாரத்தில் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், அபராத தொகை கட்டுவது தொடர்பாக சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். பணத்தை கட்டலாமா அல்லது மேல்முறையீடு செய்யலாமா? என்பது குறித்து விவாதித்தனர். அதேபோல முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.