தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து!

 

Advertisement

வாஷிங்டன்: அரசு நிதி மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அண்மையில் அமெரிக்க செனட் சபையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற 60 சதவீத வாக்குகள் தேவை. ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததால், நிதி மசோதா நிறைவேற்றப்படாததால், கடந்த 43 நாள்களாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. நிர்வாகம் முடங்கியிருப்பது குறித்து ஜனநாயக கட்சியினருடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி, அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சமரசம் செய்துகொள்ள சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்ததையடுத்து, இந்த மசோதா செனட் அவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஓவல் அலுவலகத்தில் செலவீனங்களுக்கான மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார். 43 நாட்களுக்கு அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது. இது குறித்து பேசிய அதிபர் டிரம்ப், கடந்த 43 நாள்களாக, சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்காக கோடிக்கணக்கான டாலர்களைப் பறிக்க முயற்சித்த ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்க அரசை முடக்கினர்.

இன்று, மிரட்டி பணத்தை பறிப்பதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்ற தெளிவான செய்தியை நாங்கள் சொல்ல விரும்புகிறோம் என்று கூறினார்.

Advertisement

Related News