பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!
சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். நிறுவனத்தின் இயக்குநர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். நிறுவனத்தின் இயக்குநர் ஏ.வி.எம்.சரவணன் (86) வயதுமூப்பு காரணமாக காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களை ஏ.வி.எம்.நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.வி.எம்.சரவணன் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர். 1980, 90-களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் ஏ.வி.எம்.சரவணன். ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் அவர்களுக்கு இன்று மாலை 3.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலம் மாலை 4.00 மணியளவில் புறப்பட்டு ஏ.வி.எம். ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். நிறுவனத்தின் இயக்குநர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், பாக்யரஜ், சூர்யா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது; திரைப்பட தயாரிப்பு துறையின் ஆலமரம் சாய்ந்தது! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் துவக்கப்பட்ட நாள் முதல் மூத்த தயாரிப்பாளர்கவும். ஆயுட்கால உறுப்பினராகவும் இருந்து வந்த ஏ.வி.எம் சரவணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி திரைத்துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் பேரதர்ச்சியாகும். தமிழ் திரை உலகில் வி.சி.குகநாதன், எஸ்.பி முத்துராமன், ஏ.சி. திருலோகசந்தர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், பாரதிராஜா. இராம நாராயணன், விசு, கே. ரங்கராஜ், ஆர்.வி உதயகுமார். ஷங்கர் என முன்னணி இயக்குனர்கள் பலரும் ஏ.வி.எம்ல் பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், அஜித், பாக்யராஜ், பாண்டியராஜன் நடிகர்களின் படங்கள் மட்டுமல்ல, சிறுமுதலீட்டில் தயாரித்த சிறப்பான படங்கள் உட்பட 150 படங்களுக்கு மேல் தயாரித்த நிறுவனம் ஏ.வி.எம்-ல் முக்கிய பங்கு வகித்தவர் சரவணன் அவர்கள். சிறு முதலீட்டில் ஏ.வி.எம். தயாரித்த 'சம்சாரம் அது மின்சாரம்" படம் தேசிய விருது பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத் தொழிலை மிக நேர்த்தியாக கையாண்ட நிறுவனம் ஏவிஎம் நிறுவனம். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் கோலோச்சிய நிறுவனம். அவரது மறைவு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும். ஏவிஎம் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.