தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் 3 நாட்கள் முன் உயிரிழப்பு: குடியாத்தத்தில் தலைமறைவாக இருந்த போலி மருத்துவர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்ததில் போலி பெண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற இளம்பெண் உயிரிழந்த நிலையில் தலைமறைவாக இருந்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர். குடியாத்ததை அடுத்துள்ள பிச்சனூர் பேட்டையை சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண் காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக காளியம்மன் பட்டியில் உள்ள பிரியா என்ற மருத்துவரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக சிகிச்சை பெற்றுள்ளார்.
Advertisement

ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் மூச்சு திணறலால் பிரியங்கா உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா சிகிச்சை பெற்ற மருத்துவர் போலி மருத்துவர் என்றும் அவரது சிகிச்சைக்கு பின்னரே உடல்நிலை மோசமாகி உயிரிழந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

இதை அடுத்து உயிரிழந்த இளம்பெண் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதிகாரிகள் சோதனைக்கு வருவதை முன்கூட்டியே அறிந்து மருத்துவர் பிரியா தப்பி சென்றுவிட்ட நிலையில் சுகாதாரத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் தேடுதலில் ஈடுபட்டு வந்த போலீசார் வேலூர் அருகே பிரியாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டிப்ளமோ நர்சிங் படித்து பாதியிலேயே படிப்பை கைவிட்டது தெரியவந்தது.

Advertisement

Related News