தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் குரலில் பேசி 17 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்திய மாணவர் கைது

கோவை: போனில் பெண் குரலில் பேசி தோழியாக பழகி காதலிக்க வற்புறுத்திய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். கோவை குனியமுத்தூர் பைபை நகரை சேர்ந்த தொழிலதிபரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரிடம் உக்கடம் அருள் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜூனைத் (22) என்பவர், செல்போனில் ஸ்னாப் ஷாட் மூலம் பெண் குரலில் பேசி தோழி போல் பழகியுள்ளார். இரண்டு மாதமாக பள்ளி மாணவியும் அவர் பெண் என நினைத்து பேசி பழகி வந்தார். ஆனால், அதன் பிறகு தன்னுடன் ஸ்னாப் சாட்டில் பேசியது வாலிபர் என அந்த மாணவிக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்து ஜூனைத்துடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், ஜூனைத் மாணவியை தொடர்ந்து காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.
Advertisement

இதற்கு மாணவி சம்மதிக்கவில்லை. சம்பவத்தன்று பள்ளி மாணவி வீட்டை கண்டுபிடித்து அவர் வீட்டிற்கு வந்து வாசலில் காத்திருந்தார். இதை மாணவியின் தந்தை பார்த்து விட்டார். ஜூனைத்திடம் சென்று இங்கு ஏன் இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு பதில் சொல்லாமல் ஓட முயன்றார். ஆனால், மடக்கி பிடிக்க முயன்ற போது ஜூனைத்தின் செல்போன் தவறி கீழே விழுந்தது. அதை எடுத்து பார்த்த போது ஜூனைத், பல இளம்பெண்களிடம் ஸ்னாப் ஷாட் மூலமாக பேசி பழகி வந்ததும், காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. சில மாணவிகளை அவர் காதலிப்பது போல் நடித்துள்ளதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக, குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து ஜூனைத்தை கைது செய்தனர்.

Advertisement

Related News