தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 பெண் ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பெண் ரவுடிகளை ஒரு வருடத்திற்கு ஊருக்குள் நுழைய திருச்சூர் போலீஸ் தடை விதித்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கரயாமுட்டம் பகுதியை சேர்ந்தவர் சுவாதி (28). அருகில் உள்ள வலப்பாடு என்ற பகுதியை சேர்ந்தவர் இயானி ஹிமா (25). பிரபல ரவுடிகளான இவர்கள் இருவர் மீதும் திருட்டு, அடிதடி உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 2 பேர் மீதும் திருச்சூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

இதன்படி வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், 6 மாதத்திற்கு தினமும் கொடுங்கல்லூர் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுவாதியும், இயானி ஹிமாவும் தினமும் கையெழுத்து போட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் திருச்சூரில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுவாதியையும், இயானி ஹிமாவையும் ஒரு வருடத்திற்கு திருச்சூர் ஊருக்குள் நுழைய தடை விதித்து திருச்சூர் சரக டிஐஜி ஹரிசங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

Related News