தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை: காரணம் என்ன? தீவிர விசாரணை

அண்ணாநகர்: டி.பி.சத்திரம் குடியிருப்பில் வசித்துவந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை அண்ணாநகர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் கார்த்திகா ராணி (30). டி.பி. சத்திரம் காவலர் குடியிருப்பில் 2 குழந்தைகளுடன் வசித்துவந்த இவர், தினமும் அதிகாலையில் எழுந்து தனது பணிகளை துவங்கிவிடுவார் என்று தெரிகிறது. இந்தநிலையில், இன்று காலை அவர் வெளியே வரவில்லை என்றதும் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அவரது வீட்டின் கதவை தட்டியபோது உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது கார்த்திகா ராணி தூக்கில் தொங்குவது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

இதுபற்றி டி.பி. சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து கார்த்திகா ராணி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ‘’கார்த்திகா ராணி கடந்த ஒரு வருடத்துக்கு முன் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்துள்ளார்’ என்று தெரியவந்துள்ளது.‘’கணவரை பிரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்தாரா வேறு ஏதாவது பிரச்னை காரணமா என்று போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் காவலர் குடியிருப்பில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisement

Related News