தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் ரியல் எஸ்டேட் அதிபர் காருக்குள் அடித்து கொலை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆவுடையப்பொய்கை காட்டுப்பகுதியில் கார் ஒன்றில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், கொலையானவர் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த பாண்டிக்குமார் மனைவி மகேஸ்வரி(35) என்பது தெரியவந்தது. இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் வெளிநாட்டில் மருத்துவம் படித்துவரும் நிலையில், மற்றொருவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். ரியல் எஸ்டேட் செய்து வரும் மகேஸ்வரி, நேற்று காலை இடம் பார்ப்பதற்காக ஆவுடையப்பொய்கை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, கார் கதவில் தலையை பலமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து டிஎஸ்பி கவுதம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, காரில் இருந்து சிறிது தூரம் சென்றது. மேலும் கொலை தொடர்பாக மகேஸ்வரி வீட்டின் அருகே வசிக்கும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News