தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரிந்து வாழும் நிலையில் பெண் காவலருக்கு கத்திக்குத்து: கணவருக்கு போலீசார் வலை, பட்டப்பகலில் பயங்கரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பட்டப்பகலில் பெண் காவலரை, சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் டில்லிராணி (31). இவர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மேகநாதன் கணினி உதிரிபாகங்கள் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
Advertisement

இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இதனையடுத்து நேற்று பெண் காவலர் டில்லிராணி பணி முடிந்து, காஞ்சிபுரம் சாலைத்தெரு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் மேகநாதன், டில்லி ராணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த மேகநாதன், தான் வைத்திருந்த கத்தியால் டில்லிராணியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதில் பல இடங்களில் டில்லி ராணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த டில்லிராணியை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து அங்கு சென்ற சிவகாஞ்சி போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பெண் காவலர் டில்லிராணியை கத்தியால் குத்துவிட்டு தப்பியோடிய அவரது கணவர் மேகநாதனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News