தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணை கொன்றுவிட்டு முதியவர் தற்கொலை: கள்ளக்காதல் தகராறில் நடந்ததா?

Advertisement

திட்டக்குடி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் சின்னபொண்ணு (50). இவரது மகன்கள் மணிகண்டன், மணிமாறன் இருவருக்கும் திருமணமாகி அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்துவிட்டதால் சின்னபொண்ணு திட்டக்குடியை அடுத்துள்ள வதிஷ்டபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து 5 மாதமாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது மூத்த மகன் மணிகண்டன், நேற்று காலை தாயை பார்க்க வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டி இருந்தது. மாற்றுச்சாவியால் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சின்னபொண்ணு ரத்த வெள்ளத்தில் கீழே இறந்து கிடந்தார். அருகில் 70 வயது முதியவர் ஜன்னலில் சேலையால் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், திட்டக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், தூக்கில் இறந்து கிடந்தவர் பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் பகுதியை சேர்ந்த சதாசிவம் (70) என்பதும், அப்பகுதியில் உள்ள பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்ததும், 2 மாதத்திற்கு முன் வயது மூப்பு காரணமாக வேலையில் இருந்து விலகியதாகவும் தெரியவந்தது. சின்னபொண்ணு மார்பு மற்றும் முதுகு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். கள்ளக்காதல் தகராறில் முதியவர் பெண்ணை கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News