தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச வீடியோ: எஸ்பி ஆபீஸ் உதவியாளர் கைது

ஊட்டி: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன்(45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அங்கு காவல்துறையினர் பயணப்படிக்கான வவுச்சர் ஒப்புதல் செய்து பணம் கொடுத்தல் உள்பட பல்வேறு வகையான எழுத்து பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் அண்மையில் வெளி மாவட்டத்திற்கு சென்று வந்த செலவு விவரங்களுக்கான தொகையை தர கோரி நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் இவரிடம் விண்ணப்பத்துடன் வவுச்சர் கொடுத்தார். அதில் தனது செல்போன் எண்ணையும் அவர் பதிவு செய்திருந்தார்.

Advertisement

அந்த எண்ணை குறித்துக் கொண்ட முருகன், பகல் மற்றும் இரவு நேரங்களில் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ் ஆப்பிற்கு குட் மார்னிங், குட் நைட் என தொடர்ச்சியாக குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். புதிய எண்ணாக இருந்ததால் ஆய்வாளர் எந்த பதிலும் கொடுக்காமல் விட்டுவிட்டார். அடுத்த ஒரு சில வாரங்களில் பெண் ஆய்வாளரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை முருகன் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இன்ஸ்பெக்டர், இதுகுறித்து ஊட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து ஊட்டி ஊரக ரூரல் இன்ஸ்பெக்டர் கமலேஸ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். இதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News