தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாப்பிள்ளை பிடிக்காததால் விஷ ஊசி போட்டு கொண்டு பெண் டாக்டர் தற்கொலை

தர்மபுரி: ெபற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால், தனியார் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், ஹரிகரநாத கோயில் தெருவை சேர்ந்தவர் பச்சியப்பன் மகள் மோனிகா(27). இவர் பிலிப்பைன்சில் எம்பிபிஎஸ் முடித்து விட்டு, கடந்த 2 ஆண்டுகளாக தர்மபுரி டவுனில் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு இரவு பணிக்கு சென்றார். நள்ளிரவு தனி அறையில் தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை 2 மணிக்கு, புறநோயாளி பிரிவுக்கு நோயாளிகள் வந்ததால், செவிலியர்கள் மருத்துவரின் அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால், டாக்டர் மோனிகா கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது, குளுக்கோஸ் போடும் ஊசியை கையில் செலுத்திய நிலையில், அவர் மயங்கி கிடந்தார்.

உடனடியாக கதவை உடைத்து சென்று அவரை மீட்டனர். அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டாக்டர் மோனிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், டாக்டர் மோனிகாவிற்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்று தோழிகளிடம் கூறியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த மோனிகா, தவறான மருந்தை ஊசியில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது கைப்பையில், 40 தூக்கமாத்திரைகளும் இருந்துள்ளது.

Related News