தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலியை 2வது திருமணம் செய்ய கணவன் முயற்சி: பெண் டாக்டர் தற்கொலை

Advertisement

திருமலை: காதலியை 2வது திருமணம் செய்ய கணவன் முயன்றதால் அவரது மனைவியான பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ருஜன் (40), இதய மருத்துவர். வாரங்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரத்யுஷா (33), பல் டாக்டர். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ருஜன் பணியாற்றும் மருத்துவமனைக்கு சமீபத்தில் இன்ஸ்டா மற்றும் யூடியூய் மூலம் பிரபலமான இளம்பெண் ஒருவர் விளம்பர பணிக்காக வந்தார். அங்கிருந்த மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். அதில் டாக்டர் ஸ்ருஜன், இளம்பெண்ணின் பேச்சால் மயங்கினார். இதன்மூலம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் ஸ்ருஜனின் காரையும் அந்த பெண் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையில் பிரத்யுஷா, தனது 2வது பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது, அந்த இளம்பெண்ணை தனது வீட்டிற்கே டாக்டர் அழைத்து சென்றுள்ளார். இதையறிந்த பிரத்யுஷா, கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு ஸ்ருஜன், தனது மனைவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தினாராம். இதனால் மனவேதனை அடைந்த பிரத்யுஷா, தனது மாமியார், மாமனாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் இளம்பெண்ணை ஸ்ருஜன் 2வதாக திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதையறிந்த பிரத்யுஷா தற்கொலைக்கு முயன்றாராம். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையறிந்த பிரத்யுஷாவின் தாய் பத்மாவதி உடனடியாக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பிரத்யுஷா இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து பிரத்யுஷாவின் பெற்றோர் நேற்று போலீசில் புகார் செய்தார். அதில், ‘எங்களது மகளை, டாக்டர் ஸ்ருஜன்தான் கொலை செய்தார்’ என கூறியிருந்தனர். இதையடுத்து போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement