12 பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துக் கழகத்தில் 15 பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட 15 பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளது. 2010ம் ஆண்டு அக்டோபர் முதல் நடத்துநர்களுக்கான பணிப்பலன்களை வழங்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம் கோரி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து பெண் நடத்துநர்கள் வழக்கு தொடர்ந்தனர்.