தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெற்றோர் தவறான உறவை கண்டித்ததால் தனியார் கார் ஷோரூம் பெண் வரவேற்பாளர் தற்கொலை: 5 வயது மகன் அனாதையைாக நிற்கும் கொடுமை

சென்னை: பெற்றோர் தவறான உறவை கண்டித்ததால் மனமுடைந்த தனியார் கார் ஷோரூம் பெண் வரவேற்பாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

சென்னை எம்ஜிஆர்.நகர் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் லலிதா(55). இவருக்கு சுமிதா(26) என்ற மகள் இருந்தார். சுமிதா ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள தனியார் கார் ஷோரூம் ஒன்றில் வவேற்பாளராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனது 5 வயது மகனுடன் தாய் லலிதா வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையே கணவனை பிரிந்து தனிமையில் இருந்த சுமிதாவுக்கு பிரகாஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு பிறகு காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று தனிமையில் சுற்றி வந்துள்ளனர். இது குறித்த தகவல் சுமிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவரது பெற்றோர் 5வயதில் மகன் இருக்கும் போது, வேறு ஒருவருடன் தனியாக சுற்றி வந்தால் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும் என்று கண்டித்துள்ளனர்.

இதனால் கடும் மன உளைச்சலில் சுமிதா இருந்துள்ளார். அதேநேரம் நேற்று லலிதா தனது பேரன் மற்றும் கணவருடன் திரைப்படத்திற்கு சென்றுள்ளனர். சுமிதா மட்டும் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். பிறகு திரைப்படம் முடிந்து வீட்டிற்கு வந்து வெகு நேரம் கதவை தட்டியும் சுமிதா கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து வீட்டின் கதவை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் திறந்து பார்த்த போது, சுமிதா படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சம்பவம் குறித்து லலிதா எம்ஜிஆர்.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

அதன்படி போலீசார் விரைந்து வந்து சுமிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சுமிதாவின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சுமிதாவின் இறப்பால் அவரது 5 வயது மகன் தற்போது பெற்றோர் ஆதரவுன்றி அனாதையாக உள்ளார். திருணத்திற்கு மீறிய உறவை பெற்றோர் கண்டித்தால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement