தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

43 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் மாவோயிஸ்ட் போலீசில் சரண்

திருமலை: 43 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் மாவோயிஸ்ட் போலீசில் சரண் அடைந்தார்.

Advertisement

நாட்டில் மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் ஒடிசா, சட்டீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலத்தில் நடத்தப்பட்ட என்கவுன்டரில் பல மாவோயிஸ்ட் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பல மூத்த உறுப்பினர்களும் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து விலகிச் செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 43 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் பொட்டுலா கல்பனா என்கிற சுஜாதா(62) தெலங்கானா மாநில டிஜிபி ஜிதேந்தர் முன்னிலையில் சரணடைந்தார்.

இதுகுறித்து டி.ஜி.பி.கூறியதாவது: தெலங்கானா மாநிலம் காட்வாலைச்சேர்ந்த சுஜாதா இளம் வயதிலேயே மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். 1984ம் ஆண்டில், அவர் உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர் மல்லோஜுலா கோட்டேஸ்வர ராவ் என்கிற கிஷன்ஜியை திருமணம் செய்து கொண்டார். 1996 முதல் அந்த இயக்க தளபதியாக பணியாற்றினார். ஜனதன சர்க்கார் பொறுப்பாளராக பணியாற்றிய அவர் மீது 104 வழக்குகள் உள்ளன. சுஜாதா மாவோயிஸ்ட் கட்சி மத்திய குழுவில் உள்ள ஒரே பெண் தலைவராக அங்கீகரிக்கப்பட்டு 43 ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்துள்ளார். முதலில் மாணவர் சங்கத்தில் பணியாற்றிய பின் அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்துள்ளார்.

சுஜாதாவின் கணவரான கிஷன்ஜி 2011ம் ஆண்டு வங்காளத்தில் நடந்த ஒரு மோதலில் இறந்தார். அதன் பிறகும் சுஜாதா மாவோயிஸ்ட் இயக்கத்தில் தொடர்ந்தார். தற்போது சத்தீஸ்கர் தெற்கு துணை மண்டல பணியக பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். அவர் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் அவரை பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சுஜாதா உடல்நலக்குறைவு காரணமாக போலீசில் சரண் அடைந்தார். அவருக்கு ரூ.25 லட்சம் வெகுமதி வழங்கப்பட்டது. அவரது மறுவாழ்வின் ஒரு பகுதியாக அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். இவ்வாறு டிஜிபி கூறினார்.

Advertisement

Related News