தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் கடத்தல்; டிஸ்மிஸ் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாய்க்கு சம்மன்: மும்பை போலீஸ் அதிரடி

மும்பை: மும்பையில் கடத்தப்பட்ட லாரி ஓட்டுநர், புனேவில் உள்ள பதவி நீக்கம் செய்யப்பட்ட பெண் அதிகாரி வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் அவரது தாயும் சிக்கியுள்ளார். மகாராஷ்டிராவில் போலி சாதி மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் சமர்ப்பித்ததாக எழுந்த குற்றச்சாட்டில், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கெட்கர் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில், தற்போது அவரது தாயார் மனோரமா கெட்கரும் லாரி ஓட்டுநர் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார்.

Advertisement

கடந்த 13ம் தேதி, நவி மும்பை பகுதியில் பிரகலாத் குமார் (22) என்பவர் ஓட்டிச் சென்ற லாரி, கார் ஒன்றின் மீது மோதியுள்ளது. இதைத் தொடர்ந்து, காரில் இருந்த இரண்டு நபர்கள் ஓட்டுநர் பிரகலாத் குமாரை வலுக்கட்டாயமாக தங்கள் காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காரை பின்தொடர்ந்து சென்றபோது, அது புனேவில் உள்ள பூஜா கெட்கரின் வீட்டில் நிற்பதைக் கண்டுபிடித்தனர். அங்கு கடத்திச் செல்லப்பட்ட ஓட்டுநர் பிரகலாத் குமாரை பத்திரமாக மீட்டனர்.

காவல்துறையினர் மீட்புப் பணிக்காக வீட்டிற்குச் சென்றபோது, பூஜாவின் தாய் மனோரமா கெட்கர் கதவைத் திறக்க மறுத்ததாகவும், போலீசாரிடம் முறைகேடாக நடந்துகொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு மனோரமா கெட்கருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஆண்டு நிலத்தகராறு ஒன்றில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் மனோரமா கெட்கர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News