தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலைக்கு வந்த பெண் டாக்டரை அபகரிக்க முயன்ற பல் டாக்டர்: திருமணத்துக்கு மறுத்ததால் முட்டி போட வைத்து சரமாரி அடி

Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன்(58). இவர் வனத்துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா(25), பல் மருத்துவம் படித்துள்ளார். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு, ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில், தனியார் பல் மருத்துவமனையில் கிருத்திகா பணிக்கு சேர்ந்தார். இந்த மருத்துவமனையை டாக்டர் அன்புசெல்வன் (38) என்பவர் நடத்தி வருகிறார். ஏற்கனவே திருமணமான இவரை, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம், டாக்டர் அன்புசெல்வன் ஓசூர் பத்தலப்பள்ளி பகுதிக்கு டூவீலரில் கிருத்திகாவை அழைத்து சென்றார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். அப்போதும், கிருத்திகா மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அன்புசெல்வன், அவரை சரமாரியாக தாக்கினார். பின்னர், அவரை வீட்டில் விட்டு விடுவதாக கூறி, தனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கிருத்திகாவின் செல்போன், செயின், பிரேஸ்லெட் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டு, மீண்டும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அவரை முட்டி போட வைத்தும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை கண்டு சக டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அவரை தடுக்க முயன்றனர். இதனிடையே, கிருத்திகாவின் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்ததால், பதறிப்போன அவரது தாய் அனிதா, மகளை தேடி அவர் வேலை செய்யும் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது தான் அவருக்கு தனது மகள் தாக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர், படுகாயமடைந்த கிருத்திகாவை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News