தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பட்டுப்போன்ற பாதங்களுக்கு மாஸ்க்!

நம் உடலிலேயே அதிகமாக உழைக்கும் சருமம் நம் கால் சருமம்தான். அதனா லேயே அதீத கவனம் கால்களுக்குக் கொடுப்பது அவசியம். உங்கள் கால்களில் உள்ள வறட்சியையும், கருமையும் நீக்கி, மென்மையான மற்றும் புத்துணர்வு கொண்ட தோலை பெற டூ இட் யுவர்செல்ஃப் (DIY) பாத மாஸ்க் சில இதோ.

எலுமிச்சை மாஸ்க்

தேவையானவை

* பருப்பு மாவு - 2 மேசைக்கரண்டி

* தேன் - 1 மேசைக்கரண்டி

* எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி.

செய்முறை: அனைத்தையும் கலந்து தடிமனான பேஸ்ட் போல் தயாரிக்கவும். கழுவிய கால்களில் மெதுவாக தேய்த்து பூசவும். 20 நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பயன்கள்: கருமை நீக்கம், நறுமணமும் மென்மையும் பெறலாம்.

மஞ்சள் மாஸ்க்

தேவையானவை

* கஸ்தூரி மஞ்சள் - 1/2 மேசைக்கரண்டி

* தயிர் - 2 மேசைக்கரண்டி

* தேன் - 1 மேசைக்கரண்டி.

செய்முறை: அனைத்துப்பொருட்களை கலந்து பேஸ்ட் தயாரித்து கால்களில் பூசவும். 15-20 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் சூடான நீரில் அலசவும்.

பயன்கள்: தோல் தடிமன், வறட்சி நீங்கி பளபளப்புக் கொடுக்கும்.

க்ரீன் மாஸ்க்

தேவையானவை

* புதினா/துளசி இலை- அரை கப்

* நெல்லிக்காய் பொடி - 1 மேசைக் கரண்டி

* இயற்கையான எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.

செய்முறை: இலைகளை அரைத்து அதனுடன் நெல்லிக்காய் பொடி, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். கால்களுக்கு மசாஜ் செய்வது போல் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

பயன்கள்: அலர்ஜி உண்டாக்கும் கிருமிகள் நீக்கி, கால்களுக்கு ஈரப்பதம் கொடுக்கும்.

குறிப்பு: வாரத்திற்கு இரண்டு முறை இந்த இயற்கை மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். தினந்தோறும் மாய்ச்சுரைசர்கள் அல்லது லோஷன்கள் பயன்பாடும் அவசியம். எதுவும் இல்லையேல் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தையாவது கடைபிடித்தால் வறட்சியால் உண்டாகும் சுருக்கங்கள், பாதவெடிப்பு, அலர்ஜிகள் இவற்றிலிருந்து பாதங்களைப் பாதுகாக்கலாம்.

- எஸ்.விஜயலட்சுமி