தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 மகள்களை கொன்று தந்தை தற்கொலை: வைகை அணையில் உடல்கள் மீட்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37) - பிரியங்கா (30) தம்பதிக்கு தாராஸ்ரீ (7), தமிழிசை (5) என 2 மகள்கள் உள்ளனர். தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி மன அழுத்த பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குழந்தைகளுடன் கிருஷ்ணமூர்த்தி வெளியே சென்றுள்ளார்.

Advertisement

வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை வைகை அணைப் பகுதியில் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த வைகை அணை போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், கிருஷ்ணமூர்த்தி மற்றும் 2 மகள்களை காணவில்லை என பெரியகுளம் வடகரை போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பிரியங்கா புகார் அளித்திருப்பது தெரியவந்தது.

கிருஷ்ணமூர்த்தி தனது குழந்தைகளுடன் வைகை அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அணைப்பகுதியில் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் தேடிய போது, கிருஷ்ணமூர்த்தியின் உடலும் மீட்கப்பட்டது. குடும்பப் பிரச்னையில் குழந்தைகளை வைகை அணையில் வீசி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

Related News