தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2வது மனைவிக்கு டார்ச்சர்; மகனை கொன்ற தந்தை

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஊராட்சி ஜொள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(58), விவசாயி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இவரது மகன் சரவணன் (32). இந்நிலையில், ஜெய்சங்கர் 2வதாக சித்ரா (45) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், முதல் மனைவியின் மகன் சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல், குடித்து விட்டு தகராறு செய்து வந்து உள்ளார்.அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Advertisement

இந்நிலையில், சரவணன் சித்ராவுக்கு, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா முறையிட்டதால், ஜெய்சங்கரும் மகனை கண்டித்துள்ளார். ஆனால், அதை பொருட்படுத்தாத சரவணன், தொடர்ந்து சித்ராவிடம் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஜெய்சங்கர், அவரது மற்றொரு மகன் கோவிந்தராஜ் ஆகியோர் அன்பரசு (27) என்பவரை துணைக்கு அழைத்து நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டிற்கு வந்த சரவணனை, மேல் மாடிக்கு அழைத்து சென்று சரமாரியாக அடித்து உதைத்து, செங்கல் மூலம் தாக்கி உள்ளனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை, மாடியில் இருந்து மூவரும் தரதரவென இழுத்து வந்து வீட்டிற்கு முன்பு போட்டு விட்டு சென்று விட்டனர். மறுநாள் காலை, சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறிய நிலையில், காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை அம்பலமானது. இதையடுத்து, ஜெய்சங்கர், அவரது மகன் கோவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement