தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொத்து விற்ற பணத்தில் பங்கு கொடுக்காததால் மாமனாரை அடித்து கொன்ற மருமகன்: பல்லாவரம் அருகே பரபரப்பு

பல்லாவரம்: சொத்து விற்பனை செய்ததில் தங்களுக்கான பணத்தை தராததால் ஆத்திரத்தில் மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகனை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (40). இவருக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் கல்லுப்பட்டி, வள்ளியம்மை தெருவை சேர்ந்த சரண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஆர்த்தி, சங்கீதா என்ற மகள்கள் உள்ளனர். இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், நேரு நகர், குமரன் தெரு பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து, அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக வேலை செய்து வந்துள்ளார்.

Advertisement

இவரது, மனைவியின் சொந்த ஊரான தேனியில் அவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை, அவரது தந்தை அழகர்சாமி (55), விற்பனை செய்துள்ளார். இதில் இவரது மனைவி சரண்யாவுக்கு பணம் எதுவும் தரவில்லை என்பதால், கடும் கோபத்தில் ராஜா இருந்துள்ளார். இந்நிலையில், பொழிச்சலூரில் உள்ள தனது மகள் சரண்யாவை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் தேனியில் இருந்து அழகர்சாமி வந்திருந்தார். அப்போது, சொத்து விற்ற பணத்தில் தங்களுக்கு பணம் தராதது குறித்து மருமகன் ராஜா, மாமனாரிடம் கேள்வி எழுப்பினார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜா, வீட்டின் அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து, மாமனார் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அழகர்சாமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், அழகர்சாமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, மருமகன் ராஜாவை கைது செய்தனர். சொத்து பிரச்னையில் மாமனாரை, மருமகன் அடித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News