தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அமைச்சரை கண்டித்து ஓரிரு நாட்களில் உண்ணாவிரதம்: அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் அறிவிப்பு

Advertisement

ராசிபுரம்: தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க நிபந்தனை விதிக்கும் ஒன்றிய அமைச்சரை கண்டித்து, உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர்கள் முடிவு செய்துள்ளனர். ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் தான், தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒன்றிய அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக நிதியை வழங்க வலியுறுத்தியும், தொழிற்கல்வி பயிற்றுநர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து தொழிற்கல்வி பயிற்றுநர் ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு மாநிலத்தில் கல்வி திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது, அந்த மாநிலத்தின் உரிமை மற்றும் விருப்பம் சார்ந்தது.

ஒன்றிய அரசு வேண்டுமானால், அவர்களின் கருத்ைத கூறலாம். ஆனால், நாங்கள் கொண்டு வரும் திட்டத்தை கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று கூறக்கூடாது. அதிலும் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ரூ.2,150 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது மிகவும் அபத்தமானது. இந்த நேரத்தில், தமிழக அரசுடன் இணைந்து அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை ஒதுக்காததால், மாணவர்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்படும்.

இந்த வகையில் தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பாதிக்கப்படுவர். 451 தொழிற்கல்வி பயிற்றுநர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு நிதியை ஒதுக்க வேண்டும். இதற்கான நீதி கேட்டு, விரைவில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதற்கான தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

Advertisement

Related News