தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குன்னூர் அருகே நீரோடையை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

 

ஊட்டி: குன்னூர் அருகே காட்டேரி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள முட்டிநாடு நீரோடையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல் குடிநீருக்காகவும் பல்வேறு பகுதிகளிலும் அணைகள் கட்டப்பட்டுள்ளன. அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீருக்காக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் காட்டேரி அணை கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து நாள்தோறும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இந்த நீரேற்று மையத்திற்கு தேவையான மின் உற்பத்தி செய்யும் சிறிய மின் நிலையமும் இங்கு உள்ளது.

இந்த அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக முட்டிநாடு நீரோடை மற்றும் பாலாடை நீரோடை ஆகியவை உள்ளன. ஆனால், தற்போது முட்டிநாடு பகுதியிலிருந்து செல்லும் நீரோடை, முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. அங்கு தண்ணீர் தேங்கி நிற்பதாலும், அதிக கன மழை பெய்யும் போது தண்ணீர் வேகமாக செல்லும்போது மழை காய்கறிகள் அடித்துச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே காட்டேரி அணையில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள முட்டிநாடு நீரோடையை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும். மேலும் விவசாய நிலங்களில் இருந்து வரும் மண் நீரோடையில் விழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.