தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?: 4 வாரத்தில் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை மற்றும் துயரங்களைப்போக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் அடிப்படையில், 2017ம் ஆண்டில் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய தேசியப் பிரச்னையாக விரிவுபடுத்தப்பட்டு, தேசிய அளவிலான செயல்திட்டத்தை உருவாக்கக் கோரப்பட்டது.

Advertisement

தற்கொலைக்குப் பின் இழப்பீடு வழங்குவதை விட, அதைத் தடுக்கும் தேசியக் கொள்கையே அவசியம் என நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கிடையே, நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு கடந்த 2024ம் ஆண்டு தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘விவசாயிகளின் நலனுக்காகவும், கடன் சுமை மற்றும் பயிர் இழப்பு போன்ற துயரங்களுக்கான அடிப்படைப் காரணங்களைத் தீர்க்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன?’ என்பது குறித்து விரிவான விவரங்களைக் கோரினர். மேலும், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரர் தரப்பில் கூடுதல் தரவுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்து வழக்கை ஒத்திவைத்தது.

Advertisement

Related News