விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை தகவல்
Advertisement
வாழை விவசாயிகளுக்கு சந்தை விலையில் 30.8 சதவீதமும், திராட்சை விவசாயிகளுக்கு 35 சதவீதமும், மா விவசாயிகளுக்கு 43 சதவீதமும் கிடைக்கிறது. பால் பண்ணையாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களின் விலையில் 70 சதவீதம் வரை பெறுகின்றனர். முட்டை உற்பத்தியாளர்களுக்கு சந்தை விலையில் 75 சதவீதமும், கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு சந்தை விலையில் 56 சதவீதமும் கிடைக்கிறது. மழை, வறட்சி, பருவநிலை போன்ற பல்வேறு காரணங்களால் பழங்கள், காய்கறிகளின் விலை உயர்ந்தாலும், அதிக விலை உயர்வின் பலன் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிக குளிர்பதன அமைப்புகள், சூரிய ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்’ என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement