தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரி டெல்லியில் 5 நாள் தொடர் போராட்டம்: திருச்சியில் விவசாய சங்கங்கள் அறிவிப்பு

திருச்சி: விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கேட்டு டெல்லியில் 5 நாள் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக நேற்று திருச்சியில் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். திருச்சியில் ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் நேற்று கூட்டாக அளித்த பேட்டி: தமிழகத்தில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை உடனே திறக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் தினம்தோறும் 40 கிலோ எடையுள்ள 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையை மாற்றி தினம்தோறும் 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவைக்கு அனுப்ப வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பி சுமைதூக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும். ஒன்றிய அரசை காரணம் காட்டாமல் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும். விதை நெல், உரம், பூச்சி மருந்து தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரசார பயணம் மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம். இதேபோல் விவசாய விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கேட்டு நவம்பர் 7ம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் 5 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Related News