தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொள்ளிடம் அருகே குன்னம் பெரிய வாய்க்காலை தூர்வாராததால் விவசாயிகள் அவதி

*உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே குன்னம் பாசன பெரிய வாய்க்காலை தூர்வாராததால் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலிலிருந்து ஏ பிரிவு வாய்க்காலாக குன்னம் பெரிய வாய்க்கால் பிரிந்து கொள்ளிடம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது.

இந்த வாய்க்கால் குன்னம் கிராமத்தில் மட்டும் 1500 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு பாசன வசதி அளித்து வரும் முக்கிய வாய்க்காலாக இருந்து வருகிறது. இங்குள்ள நிலங்கள் இந்த வாய்க்காலை பெரிதும் நம்பி இருக்கின்றன.

இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக குன்னம் பெரிய வாய்க்கால் தூர்வராமல் விடப்பட்டதால் வாய்க்கால் முழுமையும், புதர் மண்டி தூர்ந்து உள்ளதால், பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலில் வரும் தண்ணீர் இந்த கிளை வாய்க்காலான குன்னம் பெரிய வாய்க்கால் மூலம் சென்று சேர முடியாமல் இருந்து வருகிறது.

இந்த வாய்க்காலை நம்பி குருவை சாகுபடி முற்றிலும் இருந்து வருவதால் தற்போது வளர்ந்துள்ள குருவை நெற்பயிர் பெரிதும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து குன்னம் பெரிய வாய்க்கால் பாசனதாரர் சங்க தலைவர் செல்வக்குமார் விவசாயிகள் சார்பில் கூறுகையில்;

குன்னம் பெரிய வாய்க்கால் குன்னம் கிராமத்தில் மட்டும் 1,500 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் உரிய நேரத்தில் வந்து சேர்ந்துள்ளது.

ஆனால் குன்னம் பெரிய வாய்க்காலை இரண்டு வருட காலமாக தூர் வாராமல் விடப்பட்டதால் வாய்க்காலில் தண்ணீர் வந்து சேர முடியாமல் இருந்து வருகிறது. எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் குன்னம் பெரிய வாய்க்காலை தூர்வாரி அனைத்து நிலங்களுக்கும் எளிதில் தண்ணீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.