தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராயக்கோட்டையில் விலை சரிவால் தக்காளியை சாலையோரம் கொட்டி செல்லும் விவசாயிகள்

ராயக்கோட்டை : ராயக்கோட்டையில், விலை சரிவால் விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளியை விவசாயிகள் சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement

தோட்டத்தில் பறிக்கும் தக்காளி பழங்களை, ராயக்கோட்டையில் உள்ள மண்டிகளுக்கு மொத்தமாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, அனைத்து பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதனால், ராயக்கோட்டைக்கு வெளியிடங்களிலிருந்து வியாபாரிகள் வருகை சரிந்துள்ளது. இதையடுத்து, தக்காளி விலையும் சரிந்துள்ளது. 25 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி முதல் தரம் ரூ.200க்கும், 2ம் தரம் ரூ.150க்கும், 3ம் தரம் ரூ.100க்கும் குறைவாகவே விற்பனையாகிறது.

இதனால், சாகுபடி செலவு, பறிப்பு கூலி, மண்டிக்கு எடுத்துச்செல்லும் வாகன செலவு, மண்டி கமிஷன் தொகைக்கு கூட கட்டுப்படியாகாது என்பதால், விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளியை திரும்ப எடுத்து செல்லாமல், சாலையோம் கொட்டி விட்டுச் செல்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ராயக்கோட்டை மண்டிகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. இதனால், தக்காளிக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதையடுத்து, விற்பனைக்காக கொண்டு வந்த தக்காளியை வீட்டிற்கு கொண்டு செல்ல மனமின்றி சாலையோரம் வீசிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்,’ என்றார்.

Advertisement

Related News