தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

கமுதி : கமுதி அருகே விவசாய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி அருகே பெருநாழி மற்றும் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட. ஏக்கர் பரப்பளவிலான மானாவாரி மிளகாய் பயிர்களை கடந்த ஆண்டு பயிரிட்டு சாகுபடி செய்தனர்.

Advertisement

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெருநாழி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் பருவம் தவறிய பருவ மழையால் கஞ்சம்பட்டி ஓடையில் காட்டாற்று வெள்ளப் பெருக்கெடுத்து வெள்ளநீர் பயிர்களை சூழ்ந்தது. இதனால் பயிர்களை வெள்ள நீர் இழுத்துச் சென்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி மிகப் பெரிய நஷ்டம் அடைந்தனர்.

அப்போது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என 80 சதவீதம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நிவாரணத் தொகையும், தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மானாவாரி மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண தொகை, காப்பீடு செய்த பயிர்களுக்கு வழங்கிட கோரி நேற்று 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருநாழி துணை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் வேளாண் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெருநாழி விளாத்திகுளம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement