தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வராயன்மலை பகுதியில் தாய்லாந்து ரக மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்

கல்வராயன்மலை : கல்வராயன்மலை பகுதியில் உள்ள 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் தங்களது விளைநிலங்களில் மரவள்ளி, மக்காச்சோளம், நெல், மணிலா, போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம். இதுபோல தொடர்ந்து ஒரே மாதிரியான பயிர்களை நடவு செய்தால் பூச்சிகள் அதிகளவில் தாக்குவதால் மகசூல் குறைந்து விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.

Advertisement

இதன் காரணமாக அதிக மகசூல் கொடுக்கக்கூடிய புதிய ரகங்களை பயிர் செய்து அதன் மூலம் அதிக லாபம் ஈட்டும் வகையில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தொடர்ந்து பல்வேறு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் உள்ள முண்டியூர், மேல்முருவம், வாரம், கருவேலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் தாய்லாந்து ரக மரவள்ளி பயிர்களை சொட்டுநீர் பாசன முறையில் நடவு செய்துள்ளனர். இப்பகுதியில் இந்த மரவள்ளி செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.

இந்த ரக மரவள்ளி செடிகளை பூச்சிகள் அதிகளவில் தாக்குவதில்லை. இதனால் லாபம் அதிகரிக்கும் என்பதால் இந்த ரக மரவள்ளி செடிகளை பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி

வருகின்றனர்.

Advertisement

Related News