தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Advertisement

*மாடுகளுடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் அருள்ஜோதி, வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கருமலை ஆறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கோவி.

நடராஜன் பேசுகையில்; திட்டை, தில்லைவிடங்கன் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர்களை, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் மாடுகள் திண்று சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறினார்.

அதனை தொடர்ந்து விவசாயி ராஜேஷ் பேசுகையில்; எனது மனைவியின் குடும்ப அட்டையிலிருந்து அவரது பெயரை நீக்கி புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க முயன்ற போது ஏற்கனவே இருமுறை பெயர் நீக்கம் செய்துள்ளதாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். ஆதார் முடக்கத்தை விடுவிக்க கோரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் துறையில் மனு செய்த போது பெயர் நீக்கம் செய்து தருவதாக தெரிவித்தார்.

ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். தொடர்ந்து கோட்டாட்சியர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனிடையே விவசாய நிலங்களில் மேய்ந்த மாடுகளை தங்களது வாகனத்தில் ஏற்றி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News