தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கோட்டையன் பேட்டி எதிரொலி: விவசாயிகளுடன் எடப்பாடி கலந்துரையாடல் திடீர் ரத்து

 

Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் நான்கு இடங்களில் பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் தேனி வந்தார். நேற்று காலை எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ள ஓட்டல் கூட்ட அரங்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 12 விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க காத்திருந்தனர்.

அப்போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அவரது பேட்டியின் எதிரொலியாக, எடப்பாடி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் நடத்த இருந்த கலந்துரையாடல் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், எடப்பாடியை சந்திக்க வந்திருந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் எடப்பாடி பழனிசாமியை தனித்தனிக்குழுவாக சந்தித்து அவரிடம் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

Related News