தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணத்திற்கு 2 நாட்கள் இருந்த நிலையில் வருங்கால கணவர் தாக்கியதால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினேன்: பிரபல நடிகை உருக்கமான பேட்டி

அப்யூஜா: வருங்காலக் கணவர் அடித்ததால், திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது திருமணத்தையே நிறுத்தியதாக பிரபல நைஜீரிய நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

Advertisement

நைஜீரியாவின் புகழ்பெற்ற மூத்த திரைப்பட நடிகையான கோஸி நவ்சு, சமீபத்தில் ‘டாக் டு பி’ என்ற நிகழ்ச்சிக்கு அளித்த உருக்கமான பேட்டியில், ‘குடும்ப வன்முறைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். காதலில் துரோகத்தைக் கூட மன்னிக்கலாம், ஆனால் உடல் ரீதியான துன்புறுத்தலை ஒருபோதும் மன்னிக்க முடியாது. பெண்களின் பாதுகாப்புக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எனது திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, எனது நிச்சயதார்த்தத்தை நிறுத்தினேன். அப்போது எனது வருங்காலக் கணவர் என்னை மிகக் கொடூரமாகத் தாக்கினார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவருடன் வாழ்நாள் முழுவதும் வன்முறையைச் சகித்துக் கொண்டு வாழ முடியாது என்பதை உணர்ந்து, திருமணத்தை நிறுத்தும் கடினமான முடிவை எடுத்தேன். ஒரு ஆண் உங்கள் மீது ஒருமுறை கை வைத்துவிட்டால், அவர் அதை ஒருபோதும் நிறுத்த மாட்டார். கொடுமைப்படுத்தும் கணவருடன் பெண்கள் வாழ வேண்டாம். திருமணம் என்பது ‘வாழ்வா, சாவா’ போராட்டம் அல்ல என்பதைப் பெண்கள் உணர வேண்டும். வன்முறையில் இருந்து விலகி பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Related News