தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடும்ப தகராறில் காதல் மனைவி, மாமனார், மாமியாரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை: கணவரை கைது செய்து போலீஸ் விசாரணை

பெங்களூரு: யாதகிரி மாவட்டம் சைதாப்பூர் அருகே மனைவி, மாமனார், மாமியார் ஆகிய மூவரையும் அப்பகுதியில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யாதகிரி மாவட்டம் முனகல் கிராமத்தை சேர்ந்த நவீன் என்ற வாலிபர், தாவணகெரெவை சேர்ந்த அன்னபூர்ணா என்ற பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். நவீன்-அன்னபூர்ணா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும், அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
Advertisement

நவீன் தேவையில்லாமல் சண்டை போடுவதாகக்கூறி அன்னபூர்ணா குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஓராண்டாகியும் நவீனுடன் சேர்ந்து வாழ செல்லவில்லை. இதையடுத்து, கடந்த புதன்கிழமை அன்னபூர்ணாவின் வீட்டிற்கு சென்ற நவீன், மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டார். அன்னபூர்ணாவின் தந்தை நவீனிடம் சில நிபந்தனைகளை விதித்து, அன்னபூர்ணாவை சமாதானம் செய்துவைக்க, இருவரும் சேர்ந்து வாழ ஏற்பாடு நடந்தது. அதன்படி, அன்னபூர்ணாவை அவரது தந்தை பசவராஜப்பா மற்றும் தாய் கவிதா ஆகிய இருவரும் அழைத்து வந்து நவீன் வீட்டில் விட்டனர்.

அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு வருவதாகக்கூறி அன்னபூர்ணாவையும் காரில் அழைத்துச்சென்ற நவீன், மனைவி அன்னபூர்ணா, மாமனார் பசவராஜப்பா மற்றும் மாமியார் கவிதா ஆகிய மூவரையும் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தார். அவர்களது உடலை வடகெரெ தாலுகா ஜோலடடாகி கிராமத்திற்கு வெளியே தூக்கி எறிந்திருக்கிறார். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த சைதாப்பூர் போலீசார், நவீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement