தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

6.35 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள அரிசி குடும்ப அட்டைகள் 6.35 லட்சம் குடும்பங்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 923 குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.

ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 2ம் தேதி முதல் நியாய விலை கடை விற்பனையாளர்களால் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகப்பானது வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும். டோக்கன் பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார்களை தீர்வு செய்ய மாவட்ட மற்றும் வட்ட அளவில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 9445394673 என்ற எண்ணில் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Related News