தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1.25 லட்சம் வழங்கல் கரூர் துயரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வலியுறுத்தல்

கரூர்: கரூர் துயர சம்பவத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்பி வேணுகோபால் தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் (பொறுப்பு ஒருங்கிணைப்பாளர்) வேணுகோபால் எம்பி நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசார கூட்டத்தில் பறிபோன உயிர்களை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது. மகனை, மகளை, தாயை, தந்தையை என பல உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த கோர சம்பவம் நடந்தது முதல் கரூர் எம்பி ஜோதிமணி, அதிகாரிகளோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.

Advertisement

கரூர் சம்பவத்தில் நெருங்கிய உறவுகளை பிரிந்து வாடுவோருக்கு என்ன ஆறுதல் கூறினாலும் அது ஈடாகாது. இந்த கஷ்டமான காலத்தில் அவர்களுடன் இருந்து உதவி செய்யவே எங்களை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அனுப்பி வைத்தார். மேலும் சிகிச்சை பெற்று வருவோர் விரைவாக உடல்நலம் தேறி வீடுதிரும்ப வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தலா ரூ.1.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கஷ்ட காலத்தில் அவர்களுடன் நாங்கள் உள்ளோம். அவர்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. எனவே இந்த விஷயத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறது காங்கிரஸ். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement