தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

"5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ.50 கேஷ்பேக்".. தவறான விளம்பரங்கள் செய்ததற்காக Rapido-க்கு ரூ.10 லட்சம் அபராதம்..!!

சென்னை: ரேபிடோ நிறுவனம் முறையற்ற விளம்பரம் செய்ததாக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரு நகரங்களில் ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வசதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் 50 ரூபாய்க்கு ஆசை காட்டி வாடிக்கையாளர்களிடம் மோசம் செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. "5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ.50 கேஷ்பேக்" மற்றும் "Guaranteed ஆட்டோ" போன்ற வாசகங்களைக் கொண்டு வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ.50 பணமானது, ரொக்கமாக வழங்கப்படாமல், ரேபிடோ நாணயங்களாக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நாணயங்கள், பைக் சவாரிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியவை. ஏழு நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். மேலும் அவற்றின் மதிப்பை கட்டுப்படுத்தும் பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நியாயமற்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் அதே சேவையை பயன்படுத்தும்படி நிறுவனம் கட்டாயப்படுத்தியதாக நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தகைய விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளது என்று கூறி ரூ.10 லட்சம் அபராதம் விதித்த ஆணையம், அந்த தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று CCPA உத்தரவிட்டுள்ளது.

Advertisement