தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் ‘ஏஐ’ பயன்படுத்தி கைவரிசை முதல்வர் சந்திரபாபு நாயுடு பெயரில் போலி வீடியோ அழைப்புகள்: தெலுங்கு தேசம் மாவட்ட தலைவர்களிடம் பணம் மோசடி

 

Advertisement

திருமலை: ஏ.ஐ.தொழில்நுட்பம் (செயற்கை நுண்ணறிவு) நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் அமைச்சர் தேவினேனி உமா ஆகியோர் பேசுவது போல் வீடியோ அழைப்பு செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றி சிலர் மோசடி செய்துள்ளது அம்பலமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி, கம்மம் மாவட்டத்தில் உள்ள சத்துப்பள்ளியைச் சேர்ந்த சில தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தேவினேனி உமா என்று கூறி ஒருவர் வீடியோ காலில் பேசியுள்ளார். கட்சித் தொண்டர்களின் குழந்தைகளின் படிப்புக்கு உதவ அவர் கேட்டுக் கொண்டதால், பலர் ஆயிரக்கணக்கில் கூகுள் பே மூலம் தலா ரூ.35 ஆயிரம் அனுப்பினர்.

அதேபோல் மீண்டும் கடந்த 7ம் தேதி, அந்த நபருக்கு தல்வர் சந்திரபாபுவைப் போல தோற்றமளிக்கும் ஒருவர் வீடியோ காலில் பேசினார். அவர் கூறியபடி தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கட்சியின் அங்கீகார கடிதங்களை பெற 18 தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் கடந்த 8ம் தேதி விஜயவாடா சென்று குறிப்பிட்ட ஓட்டலில் தங்கினர்.

இதற்கிடையில், ஓட்டல் ஊழியர்கள் உணவு கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்தியதால், ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் விசாரித்தபோதுதான் ஏஐ மூலம் வீடியோ காலில் பேசி அவர்கள் ஏமாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement