தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய குடியேற்றம், வெளிநாட்டினர் சட்டம் அமல்; போலி பாஸ்போர்ட், விசா வைத்திருந்தால் 7 ஆண்டு சிறை: ரூ.10 லட்சம் வரை அபராதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனாபதியின் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நிதேஷ் குமார் வியாஸ் வெளியிட்ட அறிக்கையில்,\\” புதிய சட்டத்தின்படி இனிமேல் போலி பாஸ்போர்ட் அல்லது விசாவை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைவது அல்லது நாட்டிற்குள் தங்குவது அல்லது வெளியேறுவதற்கோ பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத , ஆனால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாத ஆனால் ரூ.10லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். விடுதிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் வெளிநாட்டினரை குறித்த தகவல்களை கட்டாயமாக தெரிவிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கின்றது.

Advertisement

செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணம் இல்லாமல் இந்தியாவின் எந்தவொரு பகுதிக்குள்ளும் நுழையும் எந்தவொரு வெளிநாட்டை சேர்ந்தவரும் சட்டத்தின் விதிகள் அல்லது அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட எந்தவொரு விதி அல்லது உத்தரவையும் மீறி நுழைபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். வெளிநாட்டவர் அடிக்கடி செல்லும் இடங்களின் மீது கட்டுப்பாட்டை செலுத்தவும், வளாகத்தை மூடுவதற்கும் அல்லது அனுமதி மறுப்பதற்கும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News