தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடு முழுவதும் போலி நிறுவனங்கள் நடத்தி ஆன்லைன் மூலம் ரூ.203 கோடி மோசடி: கைதான 2 பேர் சிறையிலடைப்பு

 

Advertisement

புதுச்சேரி: நாடு முழுவதும் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.203 கோடி மோசடி செய்த 2 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரியை சேர்ந்தவர் மகேஷ்குமார். அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலைக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்து 127 அனுப்பினார். பின்னர் வேலை எதுவும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில், புகார்தாரரிடம் மோசடியில் ஈடுபட்டது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கண்குசரண் சிபரம் பணிகராகி, அபிஷேக் (எ)ஐகத் நாயக் என தெரியவந்தது. மேலும் அவர்கள் மோசடி செய்த பணத்துடன் துபாய்க்கு உல்லாச பயணம் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மற்ற மற்ற நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக இந்திய குடியேற்றத்துறை மூலமாக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 24ம் தேதி கண்குசரண் சிபரம் பணிகராகி, அபிஷேக் (எ)ஐகத் நாயக் ஆகியோர் துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்தில் வந்தனர். அங்கு அவர்கள் 2 பேரையும் இந்திய விமானத்துறை அதிகாரிகள் பிடித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர். கைதானவர்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைதான கண்கு சரண் சிபரம் பணிகராகி, அபிஷேக் ஆகியோர் நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தி உள்ளதும் இருவர் மீதும் 23 மாநிலங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் கைப்பற்றப்பட்ட 13 வங்கி கணக்குகளின் மூலம் ரூ.203 கோடிக்கு மேல் ஆன்லைன் மோசடி நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கண்குசரண் சிபரம்பணிகராகி, அபிஷேக் (எ) ஜகாத் நாயக் ஆகியோரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், ஆதார் கார்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் புதுவை நீதிபதி முன்பு நேற்று ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் பலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement