தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி திருக்குறள் விவகாரத்தில் ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை: கோவை மருத்துவர் வி.ஜி.மோகன் பிரசாத் விளக்கம்

Advertisement

கோவை: போலி திருக்குறள் விவகாரத்தில் ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை என நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவை மருத்துவர் வி.ஜி.மோகன் பிரசாத் விளக்கம் அளித்தார். மருத்துவ தினத்தையொட்டி, கிண்டிஆளுநர் மாளிகையில் மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த 13ம்தேதி நடந்தது. தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் 50 மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டு ஆளுநர்ரவி நினைவு பரிசு வழங்கினார். இந்த கேடயத்தில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறள்தான் மிகப் பெரிய பேசுபொருளாகி உள்ளது.

திருக்குறளில் அப்படி ஒரு குறளே கிடையாது என்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே ஆளுநர் அளித்த விருதில் போலி திருக்குறள் இடம்பெற்றதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது. போலி திருக்குறள் இடம்பெற்றது மன்னிக்க முடியாத தரம் தாழ்ந்த செயல் என ப.சிதம்பரம் கண்டித்திருந்தார். கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவை மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கம் அளித்தார். போலி திருக்குறள் விவகாரத்தில் ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை

தவறுக்கு பொறுப்பேற்றுள்ள மருத்துவர் மோகன் பிரசாத், போலி திருக்குறள் எப்படி வந்தது என கூறவில்லை. ஆளுநருக்கும் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பில்லை என்று மட்டுமே மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கம் அளித்தார். போலி திருக்குறளை உருவாக்கியது யார் என்ற விளக்கம் எதையும் மோகன்பிரசாத் கூறவில்லை. போலி திருக்குறளை எழுதியது யார் என தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News