தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டில் கிளினிக் நடத்திய போலி பெண் டாக்டர் கைது

 

Advertisement

ஓசூர்: ஓசூரில் மருத்துவம் படிக்காமல், வீட்டிலேயே கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் ஜெபின் பானு(55). இவர் அந்த பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவர் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக, ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-கலெக்டர் ஆக்ருதி ெஷட்டி உத்தரவின்பேரில், ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் லட்சுமி மற்றும் ஓசூர் சரக மருந்துகள் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, ஜெபின் பானு முறையாக மருத்துவம் மற்றும் நர்சிங் படிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் சித்த மருத்துவத்திற்கு படித்ததாக கூறி, சில போலி சான்றிதழ்கள் வைத்திருந்தார். அதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்த சில ஆங்கில மருந்து, மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், ஜெபின் பானுவை அட்கோ போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் மருத்துவம் பார்த்து வந்த அறையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Advertisement

Related News