தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி டாக்டர்களை மருத்துவம் பார்க்க அனுமதித்த மருத்துவமனை உரிமையாளர் கைது

பூந்தமல்லி: வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 போலி மருத்துவர்கள் பணி செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் மருத்துவ துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்த தனியார் மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அகஸ்டின் (41), பரதன் (42) ஆகிய இருவர் போலி சான்றிதழ் மூலம், மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
Advertisement

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அகஸ்டின் மற்றும் பரதன் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், அகஸ்டின் கடந்த 2003ம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவம் பயின்றதாகவும், ஆனால் தொடர்ந்து இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்கான பதிவு செய்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், தனியார் மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

இதேபோல், பரதனிடம் விசாரித்தபோது சித்த மருத்துவராக சிகிச்சை அளித்து வந்துள்ளார். 2014ம் ஆண்டு வரை சிகிச்சை அளிப்பதற்காக சித்த மருத்துவ ஆணையத்தில் அனுமதி பெற்று இருந்ததாகவும் அதன் பின்னர், சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை புதுப்பிக்காமலும் அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, உரிய சான்றிதழ்களின்றி மருத்துவம் பார்த்த அகஸ்டின் மற்றும் பரதன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை உரிமையாளர் சரவணன் (39) என்பவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement

Related News