தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போலி ஆதார் மூலம் நில மோசடி செய்தவர் மீது உரிய நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு: போலி ஆதார் எண் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு செங்கல்பட்டு எஸ்பி மற்றும் மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டை சேர்ந்த சுப்புலட்சுமி, சந்தோஷ்குமார் மற்றும் சாதனா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டை சேர்ந்த விவேகானந்தா என்பவர் கடந்த 1973ம் ஆண்டு வாங்கிய நிலத்தை அவரது உயிரிழப்புக்கு பின் அவரது வாரிசுகள் அனுபவித்து வந்தனர். வாரிசுகளில் ஒருவரான அனிதா, தனக்கான பங்கை 1988ம் ஆண்டு பிரித்து தனியாக பதிவு செய்தார்.

இதையடுத்து, மற்ற வாரிசுதாரர்களான 3 பேரில் சுப்புலட்சுமி மற்றும் சந்தோஷ் குமாருக்கு 20 சென்ட் இடம் பிரித்து வழங்கப்பட்டது. 3வது வாரிசான சாதானாவுக்கு எந்த பங்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், சரவணன் என்பவர் 2வது பங்குதாரரின் இடத்தை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, வில்லங்கம் சரிபார்த்த போது போலியாக ஆதார் எண் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து மனுதாரர்கள் தரப்பில் மாவட்ட பதிவாளர் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் எண்ணை சரிபார்க்குமாறு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை செய்த ஆணையம் ஆதார் எண் போலியானது என்று அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து, நீதிபதி, போலி ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவை செங்கல்பட்டு சார் பதிவாளர் ரத்து செய்ய வேண்டும். ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு எதிராக மாவட்ட எஸ்பியிடம் சார் பதிவாளர் புகார் அளிக்க வேண்டும். போலி ஆதார் எண் மோசடி குறித்து காவல்துறை விசாரணையை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்று உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.

Related News